Monday, 27 April 2015

நின்று கொள்கிறாள்

வெண்ணிலவையும் செந்தாமரையும் கலந்து பூசிய வண்ணம் அவள்
சிரிப்பொலியால் புவியீர்ப்பை குறைப்பவள் அவள்
இனிக்கும் இசையை அள்ளித்தரும் அவள் பேச்சு

அழகிய குழந்தை காதுகள்
அக்குறுகிய காதுகளில் மிக குறுகிய தோடுகள்
பால் வண்ண முகம் பளிங்கு தேகம்
வகுடுடெடுத்து வாரிய குழல்கள்
புவியிலே சிறந்த சிற்பம் அவள்

கைபேசியும் வீணைபோல் இசைகிறது 
அவள் விரல்கள் தீண்டிய பிறகு. 

சிணுங்குகிறாள் , சிறரிக்கிறாள் ,
முறைக்கிறாள் , பின் புறமுதுகிட்டாள்
சற்று தலை சாய்த்து நின்றாள்
சிகை அலங்கரித்தாள் பின்
கடை கண்ணாள் பானம் எய்தாள்

அணிகலன்கள் ஏதும் இல்லை
ஆபாச உடையும் இல்லை
எனினும் எரிமலையின் நடுவே
பூச்செடி ஒன்றை நட்டு சென்றாள்

கண் பார்வை விட்டு பல மணி நேரம் ஆனாலும்
மணப் பார்வையில் மிக ஆழமாய் நின்று கொள்கிறாள்

என்று விடுமுறை

விடுதியில் வசிக்கும் மகனுக்கு என்று விடுமுறை
என்று வீடு திரும்புவான்
என்று நான் சமைத்த உணவை 
அவன் பருக நான் வயிராருவேன் - தாய்

 நாட்டை பிரிந்து வீட்டை பிரிந்து 
அயல் நாட்டில் அயராது உழைக்கும் எனக்கு
என்று விடுமுறை
என்று நாடு திரும்புவேன்
என்று தவழும் என் குழந்தையை
கைகளில் அள்ளி தழுவுவேன் - தந்தை

அனைவருக்கும் முன் அதிகாலை எழுந்து
இதர வேலைகளுடன் சமையலும் செய்து
கணவரை வேலைக்கு அனுப்பி
பின் வீடு திரும்பும் கணவருக்கு
மீண்டும் சமைத்து பரிமாறி
கணவர் உறங்கிய பிறகு உறங்கும் எனக்கு 
என்று விடுமுறை - மனைவி

 குறுகிய நான்கு சுவர் அறையில் 
கல்வியை போதிக்கும் வகுப்பிலிருந்து
என்று விடுமுறை
என்று சுவரில்லா மைதானத்தில்
கால வரைமுரைஇன்றி விளையாடுவேன் - மாணவன்

Monday, 8 September 2014

கோடி இன்பம்

தாய்க்கு செய் , செய்க்கு தாய் ,
குடிக்க நீர் , புசிக்க உணவு ,
இனிக்கும் இசை , எழில்மிகு இயற்கை ,
இளமையில் விளையாட்டு , பருவத்தில் காதல் ,
நெருங்கிய நண்பன் , ஆருயிர் தோழி ,
விரும்பிய வேலை , உழைப்பிற்கு ஊதியம் ,
அழகான மனைவி , அன்பான கணவன் ,
ஆசைக்கு மகள் , பெருமைக்கு மகன் ,
முதுமையில் அமைதி , அமைதியில் மரணம் ......

என எத்தனை கோடி இன்பம் வைத்தாய் இறைவா ....
இதை அறியா மாந்தர் இப்புவி வாழ்வை எண்ணி
புலம்புவது ஏன் ?
தூற்றுவது ஏன்?

வடநாட்டு அள்ளி

கொதிக்கும் எண்ணையில் குதிக்கும் கடுகு
அவளது சினப் பார்வை
கார்மேகங்களில் ஒளிந்து எட்டிப்பார்கும் நிலவு
அவளது புன்சிரிப்பு
துள்ளி ஓடும் புள்ளி மானையும் தள்ளி ஓடும் 
அவளது உற்சாக நடை
அகிலத்தின் ஆண் ஆதிக்கம் அனைத்தையும் சிறை பிடிக்கும்
அவள் அணிந்திருகும் வலயங்கள்
ஒழுக்கத்தில் சிறந்தவனையும் சிறிதாய் தவறு செய்ய தூண்டும்
அவளது வளைவுகள்
வறண்டு இருண்ட பூமிக்கும் குளிர்ந்த நறுமணக் காற்றை வீசும்
அவளது கூந்தல் 
என்றும் கோர்த்து நடக்க வேண்டும் என இச்சை ஊட்டும்
அவளது பச்சை குத்திய கைகள் 

ஏகோபித்த பேரழகை தன் வசம் அல்லி வந்த
வடநாட்டு அள்ளி அவள்......

Monday, 7 July 2014

இளம் சூடான நீரில் குளித்த கூந்தல்
சிற்பதத்தில் நிபுணத்துவம் அறிந்தவன் செதுக்கிய தேகம்
பல கோடி ஆண்டுகள் இவ்வுலகிற்கே
தடையில்லா மின்சாரம் தரக்கூடிய கண்கள்
பொத்தி பொத்தி பாதுகாத்த பால் வண்ண முகம்
பளிங்கினும் மெல்லிய தோள்கள் 
அத்தோள்களில் இப்புவி மறந்து நர்த்தனம்
ஆடும் நண்பா 'ஈ'
ஒரு கணம் நீயாக நான் மாறேனோ

பகல் கனா

ஆண்டுகள் பல கோடி
அதில் காதலர்களும் பல கோடி
ஆனாலும் ஓவ்வொன்றும்
புதிதானது புத்துயிர் பெற்றது 
அப்புத்துயிர் என்னையும் புதுபிக்கும் என 
கனாக்கள் கோடி காண்கிறேன்
பகலில் மட்டும் பலிக்கும் என்று ...

சிவன்

அனைவருக்கும் உரியவன் இவன்
ஆதியும் அந்தமும் ஆனவன் இவன்
இயற்கையின் பிறப்பிடம் இவன்
ஈகையின் ஊற்றிடம் இவன்
உண்மையின் சுய ரூபம் இவன்
ஊக்கத்தின் மறு உருவம் இவன்
எண்ணில் அடங்காதவன் இவன்
ஏழ்மையின் மறு பெயர் இவன்
ஐயங்களை நீக்குபவன் இவன்
ஒழுக்கங்களை போதிப்பவன் இவன் 
ஓம் காரத்தின் மூலதனம் இவன் 
ஒளடதமாய் விளங்குபவன் இவன் 
அஃறினைக்கும் அன்பானவன் இவன்
அவன் சிவன்.

சிவாய நம ஓம்....