Saturday, 26 May 2012

நிலா

சின்னஞ் சிறு குழந்தையின் அழகில் வியந்து 
அதன் அன்னை வைத்தாள் கருநிற பொட்டு 
நீண்ட நீல வானின் அழகில் வியந்து 
இயற்கை அன்னை வைத்தாள் வெண்ணிற பொட்டு 

பெங்களூர்

தேவதைகள் வாழும் தேசம் இது 
சொப்பனத்தில் காணும் சொர்க்க பூமி இது 
நினைத்தவை யாவும் நீ இங்கு நிகழ்த்தலாம் 
பெங்களூர் . . .

அன்னை

உன் ஆதி முதல் 
அவள் அந்தம் வரை 
அனைத்தும் நீ என வாழ்பவள்
- அன்னை

சொர்க்கம்

வெண்ணிலவின் முகம் 
வெகுளித்தனமான குணம் 
குழந்தை பேச்சு 
கொஞ்சும் சிரிப்பு .....
அவ்வானுலகில் இல்லை 
இப்பூவுலகில் தான் உள்ளது 
சொர்க்கம் .

Saturday, 5 May 2012

மாறி மழை

நீண்ட நாட்கள் பிரிவின் பின்
வெண்மேகங்களை சந்தித்த கருமேகங்கள்
சிந்தும் ஆனந்த கண்ணீர் தான் மாறி மழையோ !
தன் நினைவாய் அவை விட்டு செல்லும்
காதல் பரிசு தான் வானவில்லோ !

திகட்டாத தேன்

நித்தம் நித்தம் சுவைத்தாலும்
திகட்டாத தேன் உன் முகமடி
சில நொடி சிரித்தாலும்
பல கோடி இன்பம் தரும் உன் சிரிப்படி

உன் சப்தம்

யுத்தங்கள் பல வென்றவனும்
சற்று  உன் சப்தம் கேட்டால்
குண்டுகள் சுமந்த கைகளால் பூ
சென்டுகள்  சுமந்து உன்னை பின்தொடருவான்

Friday, 4 May 2012

மலர்

அழகென்னும் இன்பத் தேன் 
என்றும் வற்றாத மலர் நீ அடி
அத்தேன்னை  நித்தம் நித்தம் சிறிதும் சலுப்பின்றி
பருகும் பொன்வண்டு நான் அடி