Saturday, 24 March 2012

கண்ணாடி குவளை

கண்ணாடி குவளை - பெண்ணிடம்
ஆண் கொண்ட உறவு
கவனம் மிக அவசியம்.
குவளையில் நீந்தும் மீன் குட்டி
பெண்ணின் மனது
ஓர் இடத்தில என்றும் தங்காது

Sunday, 4 March 2012

மது

மதுவின் மேல் கொண்ட மயக்கமா
மதுவினால் கொண்ட மயக்கமா
மனிதா ஏன் இப்படி மனநிலை இழந்து
மதிகெட்டு போகிறாய்

தமிழ் பற்று

புத்தகங்கள் படித்ததில்லை ஏன் பார்த்ததுகூட இல்லை
புத்தியையும் தமிழ் பற்றையும் மட்டுமே கருவாய்
கொண்டு கிறுக்கிறேன் கவிதைகளை.

கொண்டேன் கொன்றேன்

இமை திறக்கும் நேரத்தில் காதல் கொண்டேன்
இமை மூடும் நேரத்தில் காதல் கொன்றேன்
ஆனாலும் காதல் என்னும் இன்பக்கணியை
பருகச் செய்தமைக்கு மிக்க நன்றி .

சிறந்த கவிதை

எழில் கொஞ்சும் முகம் - எதுகை
மிதமான நீண்ட கூந்தல் - மோனை
ஈரடியில் இருக்கும் இதழ்கள் - வெண்பா
கண் கண் , பல் பல் - சிலேடை
அச்சம் மடம் நாணம் - இலக்கணம்
பிறருக்காக பிறந்து வாழ்பவள் - பொருள்
அனைத்தும் கொண்ட அதிசய பெண்ணே
அகிலத்தில் நீ தானடி
தலை சிறந்த கவிதை . . . . . .

காதல் காய்ச்சல்

அவள் அழகின் மழையில் நனைந்து
காதல் காய்ச்சல் கொண்டு
கவிதையாய் இருமுகிறேன்

மாற்றம்

மாற்றம் அடையாதது மாற்றம் மட்டும் இல்லை
ஆண்களின் மனதும் தான்
அழகிகளை கண்டவுடன் அலைபாய
தொடங்கிவிடும்

Saturday, 3 March 2012

பெங்களூர்

அழகிகள் என்னும் அலைகள் வந்து
மோதும் அழகிய கடற்கரைதான்
பெங்களூரோ !

மௌனம்

உன் தாயின் கருவறை முதல்
பூமித் தாயின் கருவறை வரை
உன்னிடம் என்றும் நிலைத்து நிற்பது
உன் மௌனம் மட்டும்தான்