Monday, 8 September 2014

வடநாட்டு அள்ளி

கொதிக்கும் எண்ணையில் குதிக்கும் கடுகு
அவளது சினப் பார்வை
கார்மேகங்களில் ஒளிந்து எட்டிப்பார்கும் நிலவு
அவளது புன்சிரிப்பு
துள்ளி ஓடும் புள்ளி மானையும் தள்ளி ஓடும் 
அவளது உற்சாக நடை
அகிலத்தின் ஆண் ஆதிக்கம் அனைத்தையும் சிறை பிடிக்கும்
அவள் அணிந்திருகும் வலயங்கள்
ஒழுக்கத்தில் சிறந்தவனையும் சிறிதாய் தவறு செய்ய தூண்டும்
அவளது வளைவுகள்
வறண்டு இருண்ட பூமிக்கும் குளிர்ந்த நறுமணக் காற்றை வீசும்
அவளது கூந்தல் 
என்றும் கோர்த்து நடக்க வேண்டும் என இச்சை ஊட்டும்
அவளது பச்சை குத்திய கைகள் 

ஏகோபித்த பேரழகை தன் வசம் அல்லி வந்த
வடநாட்டு அள்ளி அவள்......

No comments:

Post a Comment