Monday, 7 July 2014

இளம் சூடான நீரில் குளித்த கூந்தல்
சிற்பதத்தில் நிபுணத்துவம் அறிந்தவன் செதுக்கிய தேகம்
பல கோடி ஆண்டுகள் இவ்வுலகிற்கே
தடையில்லா மின்சாரம் தரக்கூடிய கண்கள்
பொத்தி பொத்தி பாதுகாத்த பால் வண்ண முகம்
பளிங்கினும் மெல்லிய தோள்கள் 
அத்தோள்களில் இப்புவி மறந்து நர்த்தனம்
ஆடும் நண்பா 'ஈ'
ஒரு கணம் நீயாக நான் மாறேனோ

பகல் கனா

ஆண்டுகள் பல கோடி
அதில் காதலர்களும் பல கோடி
ஆனாலும் ஓவ்வொன்றும்
புதிதானது புத்துயிர் பெற்றது 
அப்புத்துயிர் என்னையும் புதுபிக்கும் என 
கனாக்கள் கோடி காண்கிறேன்
பகலில் மட்டும் பலிக்கும் என்று ...

சிவன்

அனைவருக்கும் உரியவன் இவன்
ஆதியும் அந்தமும் ஆனவன் இவன்
இயற்கையின் பிறப்பிடம் இவன்
ஈகையின் ஊற்றிடம் இவன்
உண்மையின் சுய ரூபம் இவன்
ஊக்கத்தின் மறு உருவம் இவன்
எண்ணில் அடங்காதவன் இவன்
ஏழ்மையின் மறு பெயர் இவன்
ஐயங்களை நீக்குபவன் இவன்
ஒழுக்கங்களை போதிப்பவன் இவன் 
ஓம் காரத்தின் மூலதனம் இவன் 
ஒளடதமாய் விளங்குபவன் இவன் 
அஃறினைக்கும் அன்பானவன் இவன்
அவன் சிவன்.

சிவாய நம ஓம்....