Monday, 8 September 2014

கோடி இன்பம்

தாய்க்கு செய் , செய்க்கு தாய் ,
குடிக்க நீர் , புசிக்க உணவு ,
இனிக்கும் இசை , எழில்மிகு இயற்கை ,
இளமையில் விளையாட்டு , பருவத்தில் காதல் ,
நெருங்கிய நண்பன் , ஆருயிர் தோழி ,
விரும்பிய வேலை , உழைப்பிற்கு ஊதியம் ,
அழகான மனைவி , அன்பான கணவன் ,
ஆசைக்கு மகள் , பெருமைக்கு மகன் ,
முதுமையில் அமைதி , அமைதியில் மரணம் ......

என எத்தனை கோடி இன்பம் வைத்தாய் இறைவா ....
இதை அறியா மாந்தர் இப்புவி வாழ்வை எண்ணி
புலம்புவது ஏன் ?
தூற்றுவது ஏன்?

வடநாட்டு அள்ளி

கொதிக்கும் எண்ணையில் குதிக்கும் கடுகு
அவளது சினப் பார்வை
கார்மேகங்களில் ஒளிந்து எட்டிப்பார்கும் நிலவு
அவளது புன்சிரிப்பு
துள்ளி ஓடும் புள்ளி மானையும் தள்ளி ஓடும் 
அவளது உற்சாக நடை
அகிலத்தின் ஆண் ஆதிக்கம் அனைத்தையும் சிறை பிடிக்கும்
அவள் அணிந்திருகும் வலயங்கள்
ஒழுக்கத்தில் சிறந்தவனையும் சிறிதாய் தவறு செய்ய தூண்டும்
அவளது வளைவுகள்
வறண்டு இருண்ட பூமிக்கும் குளிர்ந்த நறுமணக் காற்றை வீசும்
அவளது கூந்தல் 
என்றும் கோர்த்து நடக்க வேண்டும் என இச்சை ஊட்டும்
அவளது பச்சை குத்திய கைகள் 

ஏகோபித்த பேரழகை தன் வசம் அல்லி வந்த
வடநாட்டு அள்ளி அவள்......