Monday, 8 September 2014

கோடி இன்பம்

தாய்க்கு செய் , செய்க்கு தாய் ,
குடிக்க நீர் , புசிக்க உணவு ,
இனிக்கும் இசை , எழில்மிகு இயற்கை ,
இளமையில் விளையாட்டு , பருவத்தில் காதல் ,
நெருங்கிய நண்பன் , ஆருயிர் தோழி ,
விரும்பிய வேலை , உழைப்பிற்கு ஊதியம் ,
அழகான மனைவி , அன்பான கணவன் ,
ஆசைக்கு மகள் , பெருமைக்கு மகன் ,
முதுமையில் அமைதி , அமைதியில் மரணம் ......

என எத்தனை கோடி இன்பம் வைத்தாய் இறைவா ....
இதை அறியா மாந்தர் இப்புவி வாழ்வை எண்ணி
புலம்புவது ஏன் ?
தூற்றுவது ஏன்?

No comments:

Post a Comment