Monday, 5 November 2012

என் நண்பனின் உணர்வுகள் எனது வரிகளில்

நேசித்தேன் - என் அருகில் தோழியாய் இருந்தபோதும்
நேசித்தேன் - என்னை விலகி இல்லறம் கொண்டபோதும்

இன்று தாய் தந்தையரிடத்தில் 
நாளை மனைவி மக்களிடத்தில்
என உணர்வுகள் ஆயிரம் நான் கொண்டாலும்
உன்மீது நான் கொண்ட உணர்வு என்றும் இறக்காது

இது சரியா தவறா தெரியவில்லை
இவ்வுணர்வுகளை அழிக்கவும்  முடியவில்லை
இவ்வுலகில் எனக்கு மட்டும் புரிந்த
இன்பமான துன்பம் இது

நேசிப்பேன் - என் உடல் கல்லறையில் விழும்போதும்
நேசிப்பேன் - மீண்டும் கருவறையில் உயிர்த்தெழும் போதும் 
நேசிப்பேன் . . . நேசிப்பேன் . . .

No comments:

Post a Comment